ஆள் குறைப்பு: பிபிசி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

பிபிசி டிவி நிறுவனத்தில் ஆள் குறைப்பு செய்யப்பட்டதை கண்டித்து ஊழியர்கள் 24 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்தைநடத்தினார்கள். இதனால் ரேடியோ, டிவி ஒளிபரப்பு பாதிக்கப்பட்டது.

பிபிசி நிறுவனம் டிவி, ரேடியோ மற்றும் இண்டர்நெட் சேனல்களை நடத்தி வருகின்றன. தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் ரேடியோஒலிபரப்பை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தில் உலகம் முழுவதும் 27,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் 2,485 கோடியை மிச்சப்படுத்துவதற்காக ஆள் குறைப்புத் திட்டத்தை கொண்டு வரப்போவதாகவும், இந்த திட்டத்தின் கீழ்3,780 பேர் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் பிபிசியின் டைரக்டர் ஜெனரல் மார்க் தாம்சன் கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

இதற்கு பிபிசி ஊழியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைக் கண்டித்து 4 கட்டப் போராட்டத்தை பிபிசி ஊழியர் சங்கம் அறிவித்தது.

முதல் கட்டமாக 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று காலை 4.30 மணியளவில் ஊழியர்கள் தொடங்கினர். அப்போதுபணியில் இருந்த ஊழியர்கள் தங்களது பணிகளை அப்படியே விட்டுவிட்டு வெளியேறினர்.

இந்த வேலை நிறுத்தத்தில் உலகம் முழுவதும் உள்ள செய்தியாளர்கள் உட்பட 11,000 ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் ரேடியோ4 டுடே, பிபிசி டிவி, 24 மணி நேர பிபிசி செய்திகள் மற்றும் பிபிசி ரேடியோ இண்டர்நெட் சேவையும் பாதிக்கப்பட்டது.

டிவி நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டுமே வெளியானது.

2வது கட்டப்போராட்டம் வருகிற 31ம் தேதியும், 3வது கட்டப்போராட்டம் அடுத்த மாதம் 1ம் தேதியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த வேலை நிறுத்தத்தை தொடர்ந்து தற்காலிக ஊழியர்களை வேலைக்கு சேர்க்கும் பணி தொடங்கியுள்ளது.

இதற்கிடையே தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பிபிசியின் டைரக்டர் தாம்சன் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+