For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சன் டிவிக்கு எதிரான வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வீடுகளுக்கு நேரடி டெலிவிஷன் ஒளிபரப்பு அளிப்பது தொடர்பாக சன் டிவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுமீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.

வீடுகளுக்கு நேரடியாக டெலிவிஷன் சேனல்களை ஒளிபரப்பும் டிடிஎச் முறைக்கான ஒளிபரப்பு உரிமையை சன் டிவிநிறுவனத்திற்கு வழங்கக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் மேல்சபை அதிமுக எம்பிக்களின் தலைவர் பி.ஜி. நாராயணன் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை நீதிபதிகள் பிரபா தேவன், சி.நாகப்பன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். நேற்று இந்த மனு விசாரணைக்குவந்தது. மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.டி.கோபாலன், நாராயணன் சார்பில் என்.ஜோதி, சன் டிவி சார்பில்மாசிலாமணி ஆகியோர் வாதிட்டனர்.

ஜோதி வாதிடுகையில், பொது நலனுக்கு இடையூறு ஏற்படும் போது நீதிமன்றத்தை அணுகி முறையிடலாம். சன் டிவிவிவகாரத்தில் நேரடி ஒளிபரப்பு உரிமையை சகோதர நிறுவனத்திற்கு சகோதரரே தருவது போல் உள்ளது என்றார்.

வி.டி.கோபாலன் வாதிடுகையில், இது பொது நலன் மனு அல்ல. சுய விளம்பரம் தேடும் மனு. உள்நோக்கத்தோடு மற்றவர்கள் மீதுசேற்றை வாரி இறைக்க இது போன்ற குற்றச்சாட்டை கூறியுள்ளனர் என்றார்.

மாசிலாமணி வாதிடுகையில், சன் டிவிக்கு எதிரான இந்த வழக்கு உரிய காலத்துக்கு முன்பே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவேஇதை ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஊகத்தின் அடிப்படையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உரிமம் தொடர்பான விவகாரம் இன்னும் நிலுவையில் உள்ளது. உரிமம் தரப்பட்ட பிறகு அதற்கு தடை கோரினால் அதுபொருந்தும். எனவே மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றார்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X