கொடிகள் அகற்றம்: புதுவை அதிமுக சாலை மறியல்
பாண்டிச்சேரி:
முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்று வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிகளை புதுவை நிர்வாகம் அகற்றியதைக் கண்டித்துபுதுவையில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென் மாநிலமுதல்வர்கள் கூட்டம் நடப்பதையொட்டி முதல்வர் ஜெயலலிதா இன்று புதுவை வருகிறார். இதையடுத்துஜெயலலிதாவை வரவேற்று புதுவை முழுவதும் அதிமுக கொடிகளை வைத்தும், கட் அவுட்கள், வரவேற்பு தோரணங்கள்அமைத்தும் அதிமுகவினர் தடபுடலாக ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
ஆனால் போலீஸார் அவர்களாகவே கொடிகளை அகற்றத் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் அன்பழகன்தலைமையில் சாலை மறியலில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது அங்கு வந்த முன்னாள் தமிழக போக்குவரத்து அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவினரை சமாதானப்படுத்தினார்.பின்னர் போலஸீாரிடம், கொடிகளை வைத்து எதற்காக அரசியல் செய்கிறீர்கள் என்று வாதிட்டார். பின்னர் முதல்வர் ரங்கசாமியைசந்தித்து அன்பழகன் பேசினார்.
அதன் பின்னர் அதிமுகவினரே கொடிகள் அனைத்தையும் அகற்றி எடுத்துச் சென்றனர். இத்துடன் பிரச்சினையும் முடிவுக்குவந்தது.












Click it and Unblock the Notifications