ஆதி மகன் சாரதி இன்று கோர்ட்டில் ஆஜர்
சென்னை:
ஆதிகேசவனின் மகன் சாரதியின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவரை போலீஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
கோடிக்கணக்கில் மோசடி செய்த ஆதிகேசவன் மற்றும் அவரது மகன் சாரதி, மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடுமட்டுமின்றி கேரளா, ஆந்திரா, மும்பை,உத்திர பிரதேசம் என பல மாநிலங்களில் உள்ள தொழில் அதிபர்களிடமும் ஆதிகேசவன் மோசடி செய்துள்ளார்.
ஆதியின் மகன் சாரதி தற்போது போலீஸ் காவலில் உள்ளார். தனது தந்தையின் மோசடி குறித்த பல்வேறு தகவல்களை அவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதன்அடிப்படையில், போலீஸார், ஆதிகேசவன் வீட்டில் வியாழக்கிழமை சோதனை நடத்தி அங்கிருந்த குளிர்சாதன இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், சாரதியின் போலீஸ் காவல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலையுடன் முடிவடைவதால் அவர் ஜார்ஜ் டவுன் பெருநகர நீதிமன்றத்தில்ஆஜர்படுத்துகிறார்கள்.
இதற்கிடையே, ஆதிகேசவன் மீது குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவர் மீதான குற்றப்பத்திரிக்கைக்குத் தேயைவான ஆதாரங்கள்இருப்பதால் விரைவில் குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.