ஜெவுடன் ஆஸ்திரேலிய அமைச்சர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்ஸாண்டர் டோவ்னர் இன்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார்.
தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்த அவர், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்து பாராட்டு தெரிவித்தார்.
தென் ஆஸ்திரேலியாவில் தமிழகத்தில் இருந்து குடியேறியவர்கள் சிறந்த உழைப்பாளர்களாக விளங்குவதை டோவ்னரிடம் ஜெயலலிதா சுட்டிக் காட்டினர். தமிழகத்தில்பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுப்பதிலும் பயன்படுத்துவதிலும் ஆஸ்திரேலிய தொழில்நுட்பம் தேவைப்படுவதாக ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.
இந்த விஷயத்தில் அனைத்து உதவிகளையும் தமிழகத்துக்கு வழங்க ஆஸ்திரேலியா தயாராக இருப்பதாக டோவ்னர் தெரிவித்தார்.
டோவ்னருடன் இந்தியாவுக்கான ஆஸ்திரேலியத் தூதர் ஜான் மெக்கார்த்தி உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் ஜெயலலிதாவை சந்தித்தனர்.













Click it and Unblock the Notifications