நாளை முதல் புதிய ரேஷன் கார்டுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒன்றரை கோடி பேருக்கு நாளை (2ம் தேதி) முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
புதிய ரேஷன் கார்டை பெற ஒப்புகை சீட்டுடன் பழைய கார்டையும் கொடுக்க வேண்டும். இவற்றுடன் ரூ.5 கொடுத்து குடும்பத்தலைவரோ அல்லது அவரது மனைவியோ அல்லது குடும்ப அட்டையிலுள்ள 18 வயது நிரம்பிய உறுப்பினர்களோ பெற்றுக்கொள்ளலாம்.
ஒப்புகை சீட்டு இல்லாமலோ, பழைய குடும்ப அட்டை இல்லாமலோ கார்டை பெற இயலாது. அவர்கள் மீண்டும் மனு எழுதிக்கொடுத்து அடுத்த மாதம் தான் பெற முடியும். இந்த மாதத்தில் புதிய கார்டுகள் வாங்காதவர்கள் அந்த பகுதியிலுள்ள உதவிஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications