கலாம் நாளை கோவை வருகை
கோவை:
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நாளை கோவை வருகிறார்.
அங்கிருந்து கார் மூலம் ரேஸ்கோர்சில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு செல்லும் அவர், அங்கு இரவு தங்குகிறார். மறுநாள் (6ம்தேதி) காலை 8.30 மணியளவில் கோவை அருகே எட்டிமடையிலுள்ள அமிர்தா நிகர்நிலைப் பல்கலைக்கழக விழாவில் கலந்துகொள்கிறார்.
இதன் பிறகு கொடிசியா நிரந்தர கண்காட்சி வளாகத்தில் நடைபெறும் இன்டெக் கண்காட்சியை திறந்து வைக்கும் கலாம், பின்னர்குமரகுரு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் எஸ்.என்.ஆர். கல்லூரி விழாக்களில் கலந்து கொள்கிறார்.
பிற்பகலில் மணி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் சிறுதுளி விழா, ராமகிருஷ்ணா மருத்துவமனை, விவசாயப்பல்கலைக்கழகம், மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்கிறார்.
இதன் பிறகு கோவை சாய்பாபா காலனியிலுள்ள தனது நண்பர் சம்பத்குமாரின் வீட்டிற்கு கலாம் செல்கிறார். அங்கு சிறிது நேரம்நண்பருடன் உரையாடிய பிறகு மாலையில் டெல்லி திரும்புகிறார்.
அப்துல் கலாம் வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய உளவுப் பிரிவுஅதிகாரிகள் நேற்று கோவை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.












Click it and Unblock the Notifications