சேது திட்டத்திற்கு எதிர்ப்பு; 1000 மீனவர்கள் கைது
ராமநாதபுரம்:
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து ராமநாதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள்கைதுசெய்யப்பட்டனர்.
சேது சமுத்திரத் திட்டம் கடந்த 2ம் தேதி மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங்கால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு மீனவர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்கம் ஒன்றை அவர்கள் தொடங்கி பல்வேறு விதமாக போராடி வருகிறார்கள்.இந்த இயக்கத்தின் சார்பில் ராமநாதபுரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்திருந்தனர்.
இதன்படி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகை, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள்ராமநாதபுரத்தில் இன்று ஒன்று கூடினர். ராமநாதரபுரம் ரயில் நிலையம் முன்பு பிற்பகலில் அவர்கள் மறியல் போராட்டம்நடத்தத் திரண்டனர்.
ரயில் நிலையத்திற்குள் சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து கைது செய்தனர். பின்னர்அனைவரும் அங்குள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
500 பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications