தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை: கர்நாடகம்
பெங்களூர்:
தமிழகத்திற்கு காவிரி நீரை தருவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் மல்லிகார்ஜூனகார்கே கூறியுள்ளார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, உடனடியாக காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இந் நிலையில் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, தற்போதுகர்நாடகத்திலேயே குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணையில் 98 அடி நீர் மட்டுமே உள்ளது. இது மிகவும் குறைவாகும். இந்த நிலையில் தமிழகத்திற்குத்தண்ணீர் திறந்து விடுவது சாத்தியமில்லாத விஷயம்.
கபிணி அணை நிரம்பியுள்ளதால் அதிலிருந்து உபரி நீர் தானாகவே வெளியேறுகிறது. அதுதான் தமிழகத்திற்குச் செல்கிறது.
காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு அடிக்கடி வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்எழுதுகிறது. இதுபோன்ற நெருக்குதல்களுக்கு கர்நாடகம் பணியாது.
இப்போதைக்கு தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை என்றார்கார்கே.
விரைவில் இதே கார்கே, கர்நாடக காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றகவுள்ளது குறிப்பிடத்தக்கது.