காவிரி: ஆதாயம் தேடும் ஜெ- ராமதாஸ் சாடல்
சென்னை:
காவிரி விஷயத்தில் அரசியல் ஆதாயம் தேடவே மத்திய அரசை எதிர்த்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
காவிரிப் பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் இதுவரை ஜெயலலிதா ஈடுபடவில்லை. மாறாக அரசியல்ஆதாயம் தேடும் முகமாகவே, மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனஅறிவித்துள்ளார்.
அதேசமயம், திமுக கூட்டணி சார்பில் வரும் 25ம் தேதி ஒரு குழுவாக டெல்லி சென்று பிரதமர் உள்ளிட்டவர்களை சந்தித்துகாவிரி நீரை கர்நாடகம் திறந்து விடக் கோரி மனு கொடுக்கவுள்ளோம்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தங்களை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இது தொடர்பாகஅவசரச் சட்டம் பிறப்பிப்பதாக உறுதி கூறிய ஜெயலலிதா இதுவரை எதையும் செய்யவில்லை.
அதேபோல நுழைவுத் தேர்வு தொடர்பாகவும் அவசரச் சட்டம் பிறப்பிக்காமல் தமிழக அரசு மெளனம் சாதித்து வருகிறதுஎன்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications