For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுக்கோட்டை: பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகிஇறந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ளது வெள்ளாள விடுதி கிராமம். இக் கிராமத்தில் ஏராளமானவெடிமருந்து தொழிற்சாலைகள் உள்ளன.

இன்று இங்குள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சின்னையன், சுப்பையன்,சின்னையா ராவுத்தர் ஆகிய 3 தொழிலாளிகள் உடல் கருகி இறந்தனர். மேலும் 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

இவர்கள் அனைவரும் உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீஸார்ர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X