மைசூர்: கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 50,000 கன அடி நீர் திறப்பு

Subscribe to Oneindia Tamil

மைசூர்:

கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 50,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் விநாடிக்கு 80,000 கன அடி நீரை திறக்க கர்நாடக அரசு முடிவுசெய்துள்ளது.

கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மைசூரில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பும் நிலைக்கு வந்து விட்டது.மொத்த கொள்ளளவான 124 அடியை நெருங்குவதற்கு இன்னும் 3 அடி நீரே பாக்கி உள்ளது.

இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையைத் திறக்க கர்நாடக அரசு முடிவு செய்தது. சனிக்கிழமை இரவு முதல்அணை திறந்து விடப்பட்டுள்ளது. தொடக்கத்தில் விநாடிக்கு 20,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

திங்கள்கிழமை இது விநாடிக்கு 50,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இன்று இரவு விநாடிக்கு 80,000 கன அடியாக இதைஅதிகரிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

கே.ஆர்.எஸ். அணைக்கு தற்போது விநாடிக்கு 32,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இந்த அணையிலிருந்துதிறக்கப்பட்டுள்ள நீர் செவ்வாய்க்கிழமை இரவு அல்லது மறு நாள் காலையில் மேட்டூர் அணையை வந்தடையும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு மேலும்அதிக நீர் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 87 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 31,000 கன அடி நீர் வந்துகொண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+