லண்டன் விமானத்தில் கோளாறு: டெல்லியில் தரையிறக்கப்பட்டது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மும்பையிலிருந்து 315 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திடீர் கோளாறு காரணமாக நேற்று இரவுடெல்லியில் தரையிறக்கப்பட்டது. பின் கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு நள்ளிரவு 2 மணியளவில் லண்டன் புறப்பட்டுசென்றது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணியளவில் மும்பையிலிருந்து லண்டனுக்கு 315 பயணிகளுடன் ஏர் இந்தியாவிமானம் புறப்பட்டு சென்றது. இரவு 8.30 மணியளவில் இந்த விமானம் கராச்சி அருகே பறந்து கொண்டிருந்த போதுவிமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

உடனடியாக விமானி மும்பை விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டார். மும்பையில் கடுமையாக மழை பெய்துகொண்டிருந்ததால் விமானத்தை டெல்லிக்கு கொண்டு செல்லுமாறு விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்த விமானம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் உடனடியாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இரவு 10.45 மணியளவில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். விமானத்தில் இருந்தபயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர்.

பின் கோளாறு சரி செய்யப்பட்டது. இதன் பிறகு நள்ளிரவு 2 மணியளவில் அந்த விமானம் லண்டனுக்கு புறப்பட்டு சென்றது.இதனால் டெல்லி விமான நிலையத்தில் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே கடந்த சனிக்கிழமை அன்று மும்பை விமான நிலையத்தில் 315 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது ஓடுதளத்தில் வழுக்கி சேற்றில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+