இன்று ஹிரோஷிமா நினைவு தினம்

Subscribe to Oneindia Tamil

ஹிரோஷிமா:

The Littleboy Nuclear bomb

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசிய 60ம் ஆண்டு தினம்இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஜப்பானில் குண்டு வீச்சில் பலியானர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானை பணிய வைப்பதற்காக அமெரிக்கா ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்கள்மீது முதன் முதலாக அணுகுண்டுகளை வீசியது. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டுவீசப்பட்டதில் 1,40,000 பேர் இறந்தனர்.

Clouds covered by smoke after the Nuclear bomb was dropped

உலகையே உலுக்கிய இந்த சம்பவத்திற்குப் பிறகு 3 நாட்கள் கழித்து நாகசாகி நகரிலும் அமெரிக்கா அணுகுண்டுகளைவீசியது. இதில் 80,000 பேர் இறந்தனர். இந்த இரு குண்டு வீச்சிலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்தனர். அணுக்கதிர் வீச்சுஜப்பானிய சந்ததியினரிடமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

குண்டுவீச்சில் இருந்து தப்பிய 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை ஜப்பானியர்கள்"ஹிபாகுஷா என்று அழைக்கின்றனர்.

The picture of the city after the Nuclear bomb was dropped

இந் நிலையில் ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்பட்டதின் 60ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.இங்கு இறந்தவர்கள் நினைவாக கட்டப்பட்டுள்ள நினைவிடத்தில் சுமார் 55,000த்திற்கும் மேற்பட்டோர் கூடி அஞ்சலிசெலுத்தினர்.

நினைவிடத்தில் இன்று காலை 8.15 மணியளவில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் ஜப்பானிய பிரதமர் ஜுனிச்சிரோ கொய்சுமிஉட்பட பலர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+