அனைவருக்கும் கட்டாய கல்வி: ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை:
அனைவருக்கும் கட்டாயக் கல்வி கிடைக்க நான் என்னை போராளியாகவே மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன் எனபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பாமகவின் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் இன்றைய தேவைக்கேற்ற கல்வி முறை என்ற தலைப்பில் சென்னையில்கருத்தரங்கம் நடந்து வருகிறது.கருத்தரங்கத்தை ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா துவக்கி வைத்தார். அதில், ராமதாஸ், மத்திய அமைச்சரும் ராமதாசின்மகனுமாகிய அன்புமணியின் மனைவி செளம்யா, கல்வியாளர்களான முன்னாள் துணை வேந்தர் வி.சி. குழந்தைசாமி, அனந்தகிருஷ்ணன், பழனிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமதாஸ் பேசுகையில்,
ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் முதலில் செய்ய வேண்டும் அனைவருக்கும் தரமான, கட்டாயக் கல்வி கொடுப்பது தான்.இதை நான் சொல்லவில்லை. நோபல் பரிசு வென்ற மேதை அமார்தியா சென் கூறியுள்ளார்.
நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்த பல்வேறு கல்விக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் தந்த அறிக்கைகள் யாவும்நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதுவரை சமர்பிக்கப்பட்ட முக்கிய கல்விக் குழுக்களின் பரிந்துரைகளை கடந்த 6 மாதமாக ஆய்வு செய்தோம். இப்போதுஅவற்றின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து ஒரு வரைவு அறிக்கையை தயாரித்து அதை இந்த கருத்தரங்கில் விவாதித்து,ஆய்வு செய்ய இருக்கிறோம்.
இங்கு வந்துள்ள கல்வியாளர்கள் தங்களது கருத்துகளை முன் வைக்கலாம். அதை நடைமுறைப்படுத்த நான் முடிந்தவரைபாடுபடுவேன். அதற்காக நான் என்னை ஒரு போராளியாகவே மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
அனைவருக்கும் கட்டாயக் கல்வி, சுமையில்லாத கல்வி, கட்டணம் இல்லாத கல்வி, தரமான கல்வி, தாய்மொழி வழிக் கல்விகிடைக்க வேண்டும்.
அதற்காக நாம் அனைவரும் சேர்ந்து பாடுபடுவோம். தேவைப்பட்டால் போராடுவோம் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications