டிஸ்கவரி நாளை பூமிக்கு திரும்புகிறது: பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்
கேப் கனவெரால்:
உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் டிஸ்கவரி விண்கலம் நாளை தரையிறங்குகிறது. அதில் வரும் வீரர்களை பத்திரமாக மீட்கஉச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைளை நாஸா எடுத்துள்ளது.
கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியதையடுத்து 2 ஆண்டுகள் கழித்து டிஸ்கவரி விண்கலத்தை அமெரிக்காஅனுப்பியது. 7 விண்வெளி வீரர்களுடன் கடந்த இரு வாரங்களுக்கு முன் அந்த விண்கலம் கிளம்பியது.ஆனால், டிஸ்கவரி விண்ணுக்குக் கிளம்பிச் சென்றபோது அதிலிருந்த வெப்பம் தாங்கும் தகடுகளில் ஒன்று சிதறி விழுந்தது.மேலும் இரு இடங்களில் தகடுகளுக்கு இடையே பொறுத்தப்பட்ட ரீ-இன்போர்ஸ்ட் கார்பன்-கார்பன் நூலிழைகள் துருத்திக்கொண்டு வெளியே வந்தன.
அவற்றை டிஸ்கவரியில் இருந்து விண்வெளி வீரர்கள் விண்ணில் நடந்து அகற்றினர். ஆனாலும் இந்த பிரச்சனைகளால்விண்கலம் தரையிறங்கும்போது அதற்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சப்பட்டது.
அகற்றப்பட்ட இந்த நூலிழைகளால் எந்த மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து நாஸா விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
இந்த ஆராய்ச்சிகளின் முடிவில் விண்கலத்துக்கு பிரச்சனை ஏதும் ஏற்படாது என்ற முடிவுக்கு நாஸா விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.இதையடுத்து டிஸ்கவரி தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து டிஸ்கவரி பூமியை நோக்கி புறப்பட்டது. நாளை இது பூமியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுப் பாதையிலிருந்து புறப்பட்ட 32 நிமிடங்களில் புவியின் வளிமண்டலத்தை டிஸ்கவரி எட்டிவிடும். அதைத் தொடர்ந்துஅடுத்த 31 நிமிடங்களில் புளோரிடாவிலுள்ள கேப் கனவெராலில் தரையிறங்கும்.
டிஸ்கவரி விண்வெளி ஓடம் மணிக்கு 29,000 கி.மீ. வேகத்தில் பயணம் செய்யும். ஆனால் புவி வளிமண்டலத்தில் நுழையும்போது இந்த வேகத்தை கட்டாயமாகக் குறைக்க வேண்டும். அப்போது தான் பயணம் பாதுகாப்பானதாக அமையும்.
சாதாரண விமானங்களை விட வேகமாகவும், செங்குத்தாகவும் டிஸ்கவரி தரையிறங்கும். நிலத்தை தொடும் போது ஒருபாராசூட் விரிந்து அதன் வேகம் முற்றிலும் தடைபடும்.












Click it and Unblock the Notifications