அதிக கட்டணம் வசூலிக்கும் ஏர் இந்தியா: மத்திய அமைச்சர் வருத்தம்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
கேரளாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதுஎனக்கு மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் இ. அகமது கூறினார்.
கேரளாவிலிருந்து அரபு நாடுகளில் குடியேறியவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.இதில் கேரளாவைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் இ. அகமது பேசுகையில், கேரளாவிலிருந்துவளைகுடா நாடுகளுக்கு ஏர் இந்தியா, விமானங்களை இயக்குகிறது.இந்த விமானங்களில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது நியாயமற்றது. கேரள மக்களிடம் அநியாயகட்டணத்தை வசூலிப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
தேசிய போக்குவரத்து நிறுவனங்கள் இது போன்று நியாயமற்ற முறையில் நடக்கும் போது அதை எதிர்க்கும் முதல் ஆளாக நான்இருப்பேன்.
நான் மத்திய அமைச்சராக இருந்த போதிலும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால் இ. அகமது.












Click it and Unblock the Notifications