வீரப்பன் விவகாரத்தில் உண்மையைக் கூற முடியாது: ஏ.டி.ஜி.பி. விஜயகுமார்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

வீரப்பன் கொல்லப்பட்ட விவகாரத்தில் எதையும் நாங்கள் மறைக்கவில்லை. தர்மத்தின் நெறிப்படி அதிரடிப்படை வீரர்கள்அவனை சுட்டுக் கொன்றனர் என்று சேலத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் ஏடிஜிபி விஜயகுமார் பேசினார்.

சட்டம் சார்ந்த மருத்துவ துறையில் நவீனப்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கம் சேலத்தில் நடந்தது. சேலம் அரசுமருத்துவமனை மருத்துவ கல்லூரி துணை கண்காணிப்பாளர் முத்துசாமி தலைமை வகித்தார்.

மாநில சட்டம் சார்ந்த மருத்துவத் துறை நிபுணர் சங்க தலைவர் டாக்டர் வள்ளிநாயகம், சேலம் போலீஸ் கமிஷனர்ஆபாஷ்குமார், அதிரடிப்படை தலைவர் ஏடிஜிபி விஜயகுமார் மற்றும் பலர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

விஜயகுமார் பேசுகையில், சட்டம் சார்ந்த மருத்துவ பரிசோதனை மூலம் உண்மையை வெளி உலகுக்கு கொண்டு வர முடியும்.சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், சட்டம் சார்ந்த மருத்துவ துறையின் பங்களிப்பு அதிகம்.

இருட்டறையில் இருந்து கொண்டு, வீரப்பன் இறந்ததற்கான உண்மை காரணத்தை தடயவியல் பரிசோதனை மூலம்வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர். வீரப்பனை சுட்டுக் கொன்றதில் பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகிறது.

மோரில் விஷம் வைத்து கொன்றதாகவும், தயிரில் விஷம் கலந்து கொன்றதாகவும் பல்வேறு தரப்பினர் பொய் பிரசாரம்செய்கின்றனர். அதிரடிப்படை வீரர்கள், தர்மத்தின் நெறிப்படி வீரப்பனை சுட்டுக் கொன்று திருப்திகரமாக பணியைமுடித்துள்ளனர்.

வீரப்பனை காட்டில் இருந்து எப்படி வெளி கொண்டு வந்தோம் என்பதை சிலவற்றை தான் கூற முடியும், சிலவற்றை கூறமுடியாது. வீரப்பனை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் என்னை பலர் புகழ்கின்றனர். ஆனால் வீரப்பனை கொன்ற சம்பவத்தில் நான்முன்னால் நின்றேன். என் பின்னால் நின்ற 95 சதவீத வீரர்களே இதற்கு காரணம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+