ஆகஸ்ட் 15: தமிழகத்தில் போலீஸ் தீவிர கண்காணிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுதந்திர தினம் நெருங்குவதையொட்டி சென்னையில் தங்கியுள்ள பாகிஸ்தான் நாட்டவர் மீது தீவிர கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சுதந்திர தினம் நெருங்கி வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.முக்கிய ஊர்களில் உள்ள ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும்இடங்கள், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சின்னங்கள் உள்ளிட்டவற்றில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சென்னையில் தலைமைச் செயலகம், ரயில் நிலையங்கள், விமான நிலையம், வரலாற்றுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள்உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் தங்கியுள்ள பாகிஸ்தான் நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் தீவிரக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். பிற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இதுதவிர முக்கியஇடங்களான மகாபலிபுரத்திலும் உஷார் நிலையில் போலீஸார் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications