கிரிமினல்களின் பட்டியல் கேட்கிறது தேர்தல் கமிஷன்
சென்னை:
குற்றச் செயல்களில் ஈடுபட்டு பிடிவாரண்ட்பிறப்பிக்கப்பட்டும், கைது செய்யப்படாத குற்றவாளிகளின் பட்டியலை செப்டம்பர்10ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு தமிழக காவல்துறை தலைவர் (டிஜிபி) அலெக்சாண்டருக்கு மாநில தலைமைத் தேர்தல்அதிகாரி நரேஷ்குப்தா கடிதம் அனுப்பியுள்ளார்.
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ளவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில்இருந்து நீக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இவர்களைத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்தும் தடை விதிக்கவுள்ளது தேர்தல் கமிஷன்.
இதுதொடர்பான உத்தரவு அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும், மாநில அரசுகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா, டிஜிபி அலெக்சாண்டருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.இதுகுறித்து குப்தா கூறுகையில்,
கடந்த 6 மாதங்களாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள், நபர்களின் பட்டியலை தயார்செய்து தருமாறு டிஜிபிக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். செப்டம்பர் 10ம் தேதிக்குள் இந்தப் பட்டியலை அனுப்பி வைக்குமாறுடிஜிபியிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.
மாவட்ட வாரியாக கிரிமினல்களின் பட்டியலை தயார் செய்த பின்னர் அந்தந்த பகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்து, பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.