தேர்தல் களத்தில் குதித்தது காங்கிரஸ்: 540 இடங்களில் பொதுக் கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராகும் விதத்தில் தமிழகம் முழுவதும் 540 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்துகிறது தமிழககாங்கிரஸ் கட்சி.

இந்தப் பொதுக் கூட்டங்கள் ஏற்கனவே நடக்கத் தொடங்கி விட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா காங்கிரஸ் கட்சி சார்பில்கொண்டாடப்பட்டது.

இக் கூட்டத்தில் வாசன் பேசுகையில், 21வது நூற்றாண்டுக்கு இந்தியாவை அழைத்துச் சென்றவர் ராஜீவ் காந்திதான். இன்றைக்குகம்ப்யூட்டர், செல்போன்கள் என இந்தியா நவீனமயமாகியுள்ளதற்கு ராஜீவ் காந்திதான் முக்கியக் காரணம்.

நவீன இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்த ராஜீவ் காந்தி. இளைஞர்கள், மாணவர்களை அரசியலுக்கு இழுத்தவர். 18 வயதுமுடிவடைந்தவர்களுக்கு வாக்குஉலூமை பெற்றுத் தந்தவர். அப்படிப்பட்ட மகோன்னதமான தலைவர் துரதிர்ஷ்டவசமாக மதுமண்ணில் இறக்க நேரிட்டு விட்டது.

ராஜீவ் மறைவுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று கட்சியை வழி நடத்தி வருகிறார் அன்னைசோனியா காந்தி. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளையும்,பெருமைகளையும் மக்களிடம் கொண்டு செல்ல இருக்கிறோம். இதற்காக 540 இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும்.

ஏற்கனவே இந்தப் பொதுக் கூட்டங்கள் நடக்கத் தொடங்கி விட்டன. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணியும் இத்துடன் தொடங்கிவிட்டது என்றார் வாசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+