For Daily Alerts
Just In
நாட்டிலேயே காற்று மாசு குறைந்த நகரம் சென்னை
டெல்லி:
நாட்டிலேயே அதிகளவில் காற்று மாசுபட்ட நகரங்கள் வரிசையில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது சென்னை. இதன்மூலம்சுத்தமான காற்று கொண்ட நகர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ராஜா இன்று இத் தகவலைத் தெரிவித்தார்.அவர் கூறுகையில், Respirable Suspended Particulate Matter (RSPM) எனப்படும் சுவாசிக்கும் காற்றில் கலந்துள்ளரசாயன துகள்கள் சென்னையில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மிகக் குறைவாகவே உள்ளது.
நாட்டிலேயே சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் தான் இந்தத் துகள்கள் மிக அதிக அளவில் உள்ளது. இதனால் அந்த ராய்பூர் தான்நாட்டிலேயே அதிக அளவில் காற்று மாசுபட்ட நகராகும். சென்னை தான் நாட்டிலேயே குறைவான அளவில் காற்று மாசுபட்டநகராகும்.
அதிகளவில் காற்று மாசுபட்ட நகர்களில் டெல்லி 16வது இடத்திலும், மும்பை 39வது இடத்திலும் உள்ளன.
Story first published: Monday, August 22, 2005, 5:30 [IST]