பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு: ஜெ. புதிய யோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33.33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என முதல்வர்ஜெயலலிதா கோரியுள்ளார்.

நீண்ட நெடு நாட்களுக்குப் பின் இன்று கோட்டையில் நிருபர்களை சந்தித்தார் ஜெயலிலதா. அவர் கூறுகையில்,

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 3ல் ஒரு பகுதி இடங்களை இரு நபர் கொண்ட தொகுதிகளாக அறிவிக்கலாம்.(அதாவது ஒரு தொகுதிக்கு இரு உறுப்பினர்களை தேர்வு செய்வது) இதன்மூலம் தொகுதிகளின் எண்ணிக்கையைஅதிகரிக்காமலேயே பெண்களுக்கும் 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கிட முடியும்.

இந்த 33 சதவீதத்திலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும்.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து நீண்ட நாட்களாக பேசி வருகிறோம் அதை உடனடியாக அமலாக்க நடவடிக்கைகள்எடுக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

இட ஒதுக்கீட்டை அமலாக்குவதில் காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்தி வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளதே என்று கேட்டதற்கு,அதைப் பற்றி எனக்குத் தெரியாது. இந்த விஷயத்தில் எல்லா கட்சிகளும் ஒன்றாக செயல்பட்டு விரைவில் இதை அமல்படுத்தவேண்டும் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+