For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீஸ் தேர்வு கேள்வித் தாள் லீக்: உயர் நீதிமன்ற பெஞ்ச் விசாரிக்கும்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போலீஸ் தேர்வுக்கான கேள்வித் தாள்கள் வெளியானது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் மனு உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்சின் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நீதிபதி முருகேசன் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகத் தீவிரமானவைஎன்பதாலும், இதில் மிக மூத்த போலீஸ் அதிகாரிகள் மீதும் குற்றம் சுமத்தட்டப்பட்டுள்ளதாலும் வழக்கை டிவிசன் பெஞ்சுக்குமாற்று தலைமை நீதிபதிக்கு நீதிபதி முருகேசன் பரிந்துரைத்துள்ளார்.

இந்தத் தேர்வுகளுக்கான கேள்வித் தாள் இரண்டு முறை லீக் ஆயின என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மூத்த போலீஸ்அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது.

ஆனால், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காததால் கேள்வித் தாள் அவுட் ஆனது குறித்து சிபிஐ விசாரணைக்குஉத்தரவிடக் கோரி தண்டபாணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து ஐ.ஜி உள்பட 23 காவல்துறை அதிகாரிகளும் போலீசாரும் அதிகாரிகளின் டிரைவர்களும் சஸ்பெண்ட்செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் 15 காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X