For Daily Alerts
Just In
394 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
சென்னை:
மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற 394 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருதுகள்வழங்கப்படுகின்றன.பணியில் ஒழுக்கம், நேர்மை, நற்பெயர், சிறந்த பயிற்றுவிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 25 ஆண்டு சிறப்பாகப்பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 394 ஆசிரியர்கள் இந்த விருது பெற மாநில அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத்தெரிகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ பட்டியல் அடுத்த வாரத்தில் வெளியாகிறது.
இந்த ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5ம் தேதி சென்னையில் முதல்வர் ஜெயலலிதா விருதுகளை வழங்குவார் என்று தெரிகிறது.
Story first published: Wednesday, August 24, 2005, 5:30 [IST]