எல்லைப் பாதுகாப்புப் படையினரிடையே வேகமாக பரவும் எய்ட்ஸ்!!
டெல்லி:
எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் (பி.எஸ்.எப்) இடையே எய்ட்ஸ் நோய் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீரர்கள்இடையே நாடு முழுவதும் நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் 70 பேருக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து கவலையடைந்துள்ள அந்தப் படையின் டைரக்டர் ஜெனரல், ஐக்கிய நாடுகள் சபையில் எய்ட்ஸ் தடுப்புப் பிரிவின்உதவியை நாடியுள்ளார்.இது குறித்து பிஎஸ்எப் படையின் டைரக்டர் ஜெனரல் மூஸாஹரி கூறுகையில்,
படையினர் இடையே எச்ஐவி பரவலைத் தடுக்கவும், எய்ட்ஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் ஐநா எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவுடனான மருத்துவ ஒப்பந்தம்.
முதல் கட்டமாக வீரர்கள் இடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். நோயைத் தவிர்ப்பது எப்படி என்பதுகுறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்படும்.
மேலும் பிஎஸ்ப்பின் முக்கிய பயிற்சி மையங்களில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
மற்ற பாதுகாப்புப் படையினரோடு ஒப்பிட்டால் பிஎஸ்ப் வீரர்கள் இடையே எய்ட்ஸ் பரவல் மிகவும் குறைவு தான். இருந்தாலும்முன்னெச்சரிக்கையாகவே இந்த நடவடிக்கையை எடுக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications