வீரப்பன் அண்ணனை விடுதலை செய்ய முத்துலட்சுமி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரப்பனின் அண்ணன் மாதையனை தமிழக அரசுஉடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.
வன அதிகாரி சிதம்பரம கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மாதையன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சமீபத்தில் அவருக்கு சிறையில் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அவர் பலத்தபாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.மாதையனை முத்துலட்சுமி போய் பார்த்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மாதையன் ஆயுள்தண்டனை பெற்றார். ஆனால் தண்டனைக் காலத்தை விட அதிகமாகவே, அதாவது கர்நாடகாவில் 5 வருடமும், கோவையில் 13வருடமும் அவர் சிறையில் இருந்துள்ளார்.
எனவே அவரை உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முடியாவிட்டால் அடுத்த மாதம்18ம் தேதி வீரப்பனின் முதலாவது ஆண்டு நினைவு நாளில் கலந்து கொள்ள பரோலிலாவது விட வேண்டும் என்றார் முத்துலட்சுமி.












Click it and Unblock the Notifications