பாஜகவின் சென்னை செயற்குழு கூட்டம் நடக்கும்: வெங்கையா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் சென்னையில் திட்டமிட்டபடி நடக்கும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுகூறியுள்ளார்.
சென்னை வந்த வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், மதன்லால் குரானா விவகாரம் பாஜக சம்பந்தப்பட்டது.அப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும். இப்பிரச்சினையில் கட்சித் தலைவர் அத்வானியும், வாஜ்பாயும் இணைந்து தீர்வுகாண்பார்கள்.இந்தப் பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையே இல்லை. செய்தித்தாள்கள்தான் இதை பெரிதுபடுத்தி எழுதி வருகின்றன.
செப்டம்பர் 16ம் தேதி செனனையில் நடைபெறுவதாக உள்ள கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என நான்தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். இதில் மாற்றம் ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன்.
உயர் மட்ட அளவில் நிர்வாகிகள் மாற்றம் ஏற்படுவதற்கு இப்போதைக்கு வாய்ப்பே இல்லை என்றார் வெங்கையா நாயுடு.












Click it and Unblock the Notifications