12 வயது மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த ஆசிரியர்!
சென்னை:
8 வது வகுப்பு படித்து வரும் மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த ஆசிரியரை போலீஸார் அழைத்து கடுமையாக எச்சரித்து விடுவித்தனர்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் பிரபு. இவரது பள்ளியில் 12 வயதாகும் ஒருமாணவி 8வது வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி மீது ஆசிரியர் பிரபுவுக்கு ஆசை பிறந்தது.இதையடுத்து காதல் கடிதம் தீட்டினார். பின்னர் அந்த மாணவியிடம் கொடுத்த வீட்டிற்குச் சென்று படித்துப் பார்க்குமாறு கூறியுள்ளார்.மாணவியும் அக்கடிதத்தை தனது புத்தகத்திற்குள் வைத்து வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அங்கு வைத்து கடிதத்தைப் படித்தார். அப்போதுஅவரது பெற்றோர்கள் அதைப் பார்த்து விட்டனர்.
மாணவியிடமிருந்து கடிதத்தை வாங்கிப் படித்துப் பார்த்த அவர்கள் அதிர்ந்தனர். அடுத்த நாள் காலை பள்ளிக்குச் சென்ற அவர்கள்ஆசிரியர் பிரபுவின் நடத்தை குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் போலீஸாருக்குத் தகவல் போய்அவர்களும் வந்து பிரபுவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பிரபு மீது யாரும் புகார் கொடுக்காத காரணத்தால் அவரை எச்சரிக்கை மட்டும் செய்து போலீஸார் அனுப்பி வைத்தனர். 12 வயதே ஆகும்மாணவிக்கு ஆசிரியர் காதல் கடிதம் கொடுத்த விவகாரம் சென்னையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications