படம் பார்க்க முடியாமல் போனதற்காக ஒரு தற்கொலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே திரைப்படம் பார்க்க முடியாமல் போனதற்காக ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை தாம்பரம் அருகே உள்ளது ராஜ கீழ்ப்பாக்கம். இங்குள்ள சரோஜ் அவென்யூவில் வசித்து வருபவர் சுபாஷ். இவரதுமனைவி சாந்தி. இவர் வங்கியில் வேலை பார்த்து வந்தார். நன்கு படித்தவர். இந்த தம்பதிகளுக்கு பூஜா, தீக்ஷா என இருகுழந்தைகளும் உள்ளனர்.

குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டருக்கு கணவனும், மனைவியும் சனிக்கிழமை இரவு படம் பார்க்கச் சென்றனர்.ஆனால் இவர்கள் சற்று தாமதமாக சென்றதால் திரையரங்கு நிரம்பி விட்டது, ஹவுஸ் ஃபுல் போர்டு போட்டு விட்டார்கள்.

இதனால் ஏமாற்றமடைந்த சாந்தி, கணவருடன் வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும், கணவன், மனைவி இடையே தகராறுவெடித்துள்ளது. தாமதமாக கூட்டிச் சென்றதால்தான் படம் பார்க்க முடியவில்லை என்று கூறி சாந்தி கணவருடன் வாக்குவாதம்செய்துள்ளார். இதனால் கோபமடைந்த சுபாஷ் வீட்டிலிருந்து வெளியேறி சிறிது நேரத்திற்குப் பிறகு வீட்டுக்கு வந்தார்.

வந்தபோது, சாந்தியைக் காணவில்லை. படுக்கை அறை உள்புறமாக தாளிடப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் கதவைதட்டிப் பார்த்தார். ஆனால் திறக்கவில்லை. ஜன்னல் பக்கமாக வந்து பார்த்தபோது சாந்தி தனது சேலையால் மின் விசிறியில் தூக்குமாட்டிக் கொண்டு தொங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக சேலையூர் போலீஸார் விரைந்து வந்து சாந்தியின் உடலை மீட்டனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதுதெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+