காமராஜர் ஆட்சி வேண்டி குமரியில் காங்.யாகம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி மலர வேண்டி, கன்னியாகுமரியில் அம்மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் யாகம்நடத்தப்படவுள்ளது.
இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர்களான சேகர், நடேசன் ஆகியோர் இதுதொடர்பாக மாநிலத்தலைவர் ஜி.கே.வாசன், மத்திய அமைச்சர் இளங்கோவன் ஆகியோருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர்.அதில், கடந்த 38 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியவில்லை. தகுதியும், திறமையும் மிக்க பல தலைவர்கள்நமது கட்சியில் இருந்தும் யாராலும் வெற்றி பெற முடியவில்லை. இழந்த ஆட்சியை நாம் மீட்டெடுக்க வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சி மலர பலமுறை வாய்ப்புகள் கதவத்ை தட்டியபோதெல்லாம் நாம் கதவை மூடி விட்டு கை கட்டி வேடிக்கைபார்த்திருந்தோம். மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர 100 தொகுதிகளையாவது வரும் தேர்தலில் பெற்று நாம் போட்டியிடவேண்டும்.
இதற்காக கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் நினைவிடம் அருகே வருகிற அக்டோபர் 2ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை கூட்டுப் பிரார்த்தனை யாகம் நடைபெறும் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications