For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருமாவளவன் கார் மீது கல்வீச்சு

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கார் மீது சரமாரியாக கல்வீச்சு நடத்தப்பட்டது. இதனால் புதுவைஅருகே பதற்றம் ஏற்பட்டது.

திட்டக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக தொல். திருமாவளவன் நீதிமன்றத்திற்குச்சென்றார்.

தனது ஆதரவாளர்களுடன் காரில் திட்டக்குடிக்கு அவர் சென்றபோது புதுவை அருகே உள்ள வசிஷ்டபுரம் என்ற இடத்தில்அவரது காரை நாகர்சேனை என்ற அமைப்பினர் தடுத்து நிறுத்த முயன்றனர்.

ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. அப்போது அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் திருமாவளவன் கார் மீது சரமாரியாககற்களை வீசித் தாக்கினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

கல்வீச்சில் ஈடுபட்டது தங்கமணி என்பவர் தலைமயிலான குழுவினர் எனக் கூறப்படுகிறது. இவர் கடந்த 1999ம் ஆண்டுவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டவர்.

திருமாவளவன் மீதுள்ள கோபம் காரணமாகவே அவர் கல்வீச்சில் இறங்கியதாகத் தெரிகிறது. கல்வீச்சு தொடர்பாக தங்கவேல்உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X