தமிழகம் முழுவதும் பலத்த மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தென் வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும்அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக் கூடும்.
கடந்த வாரம் சென்னையில் மையம் கொண்டிருந்த புயல் ஆந்திராவில் கரையை கடந்தது. அதனால் தமிழகத்துக்குஆபத்து நீங்கியது.இந்த நிலையில் தென் வங்க கடலின் மத்திய பகுதியில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னைவானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. பிறகு வெயில் அடித்தது. மீண்டும் மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழை நீர் மீண்டும் தேங்கியுள்ளது.
மேலும் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யவும் இடையிடையே பலத்த மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகவானிலை மையம் தெரிவித்துள்ளது












Click it and Unblock the Notifications