For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாகை-திருவாரூரில் மழைக்கு 4 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

வேதாரண்யம்:

மழை வெள்ளத்திற்கு நாகை-திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 2 மாணவர்கள் உள்பட 4 பேர் பலியாயினர். மேலும்மின்னல் தாக்கி 7 பெண்கள் படுகாயமடைந்தனர்.

தமிழகம் முழுவதும் பெய்து வரும் பலத்த மழையால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாகைமாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கள்ளிமேடு கிராமத்தில் நெல் வயலில் பெண்கள் களை எடுத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது மின்னல் தாக்கியதில் செம்போடை கிராமத்தை சேர்ந்த பத்மா (வயது 51) அந்த இடத்திலேயேஉயிரிழந்தார்.

அவருடன் களை எடுத்துக் கொண்டிருந்த தேவி (வயது 35), விஜயலட்சுமி (வயது 55), கமலா (வயது 40)ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வேதாரண்யம் அருகேயுள்ள செட்டிபுலம் கிராமத்தில் வயலில் மாடுமேய்த்து கொண்டிருந்த சித்திரவேலு (வயது67) என்பவர் மின்னல் தாக்கி படுகாயமடைந்தார்.

அந்த பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 7 பெண்களும் மின்னல் தாக்கி காயமடைந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கீழமஸ்தான் சாவடியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. அவரது மகன் சக்திவேல் (வயது 15)தீபாவளிக்காக நாகை மாவட்டம் அருந்தவம் புலம் கிராமத்தில் உள்ள தனது மாமா செல்வராஜ் வீட்டுக்குசென்றிருந்த போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவயிடத்திலேயேஇறந்தான்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள ஆவூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 12)தனது நண்பர்களுடன் சுள்ளன் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது ஆற்றில் மூழ்கி இறந்தான்.

இதே போல ஆற்றில் குளித்த 50 வயதுக்குட்பட்ட ஒருவரும் ஆற்றில் மூழ்கி இறந்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X