For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 குழந்தைகளுக்கு தாய் கற்பழிப்பு: வாலிபர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சேலத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணை வீடு புகுந்து கற்பழித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சேலம் சிவதாபுரம் திருமலைகிரி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 25). இவரது மனைவி சத்யா (வயது23). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 3 குழந்தைகள் உள்ளனர்.

வெங்கடேஷ் ஆசாரித் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த அம்மாசி என்பவரின்மகன் ரமேஷ் (வயது 25) திருமணமாகாதவர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சத்யா வீட்டில் தனியாக இருந்த போதுஅவரை கெடுக்க முயற்சித்துள்ளார்.

இது குறித்து போலீஸ் புகார் தெரிவிக்கப்பட்டது. பிறகு இரும்பாலை காவல் நிலையத்தில் ரமேஷ் மன்னிப்பு கடிதம்கொடுத்ததின் பேரில் சமரசமானது.

இந்த நிலையில் நேற்று, ரமேஷ் தன்னை பலவந்தமாக கற்பழித்தாக கூறி சேலம் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ள சத்யா கூறுகையில், வீட்டில் மதியம் தனியாக இருந்த போது வீட்டிற்குள் புகுந்த ரமேஷ் என்றவாலிபர் என் வாயில் துணியினை அடைத்து தலையை சுவற்றில் அடித்து மயக்கம் அடைய செய்துவிட்டுகற்பழித்துவிட்டார்.

அதன் பிறகு வேலைக்கு போய்விட்டு வந்த என் கணவர் வெங்கடேஷ் வந்து மயங்கிகிடந்த என்னை எழுப்பினார்.இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளோம் என்றார்.

புகார் நடவடிக்கை குறித்து இரும்பாலை இன்ஸ்பெக்டர் பழனிசாமி கூறுகையில், ரமேஷ்க்கும், சத்யாவிற்கும்ஏற்கனவே தொடர்பு இருந்துள்ளது.

சம்பவத்தன்று சத்யா கற்பழிக்கப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

இதற்கிடையில் ரமேசை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X