மாஜி திமுக எம்பியின் ரூ. 75 கோடி மோசடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டெல்லியைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிறுவனத்திடம் ரூ. 75 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் கரூர்எம்.பி. கே.சி.பழனிச்சாமிக்கு டெல்லி நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டேட்டா அக்செஸ் இந்தியா என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்சித்தார்த் ராய் டெல்லி போலீஸில் சமீபத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், சேரன் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்தின் புரமோட்டர் என்ற அடிப்படையில் என்னிடம் பழனிச்சாமி ஒப்பந்தம் ஒன்றைசெய்து கொண்டார்.

அதன்படி டேட்டா அக்செஸ் இந்தியா நிறுவனத்தில் பழனிச்சாமி ரூ. 75 கோடி முதலீடு செய்ய வேண்டும். ஆனால் பழனிச்சாமி அப்பணத்தை முதலீடு செய்யவில்லை.

அதேசமயம், ஒப்பந்தம் செய்தபடி டேட்டா அக்செஸ் நிறுவனத்தை அவரது சேரன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு மாற்றிவிட்டோம்.

இதைப் பயன்படுத்திக் கொண்டு நிறுவனத்தின் முக்கிய பங்குகளையும், எனக்குச் சொந்தமான 2 அசையாச் சொத்துக்களையும்பழனிச்சாமி தனது பெயருக்கு மாற்றிக் கொண்டாக். ஆனால், ரூ. 75 கோடியை முதலீடு செய்யாமல் மோசடி செய்து விட்டார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் பழனிச்சாமி மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து டெல்லிகூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பழனிச்சாமி முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், பழனிச்சாமிக்கு முன் ஜாமீன் வழங்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+