சோகத்தில் மூழ்கிய எம்.ஜி.ஆர் நகர்
சென்னை:
42 உயிர்களைப் பலி கொடுத்து விட்டு சென்னை எம்.ஜி.ஆர். நகர் பெரும் சோகத்தில் மூழ்கி கிடக்கிறது. எங்கு பார்த்தாலும்அழுகையும், கண்ணீருமாக மக்கள் காணப்படுகின்றனர்.
வெள்ள நிவாரணம் பெறச் சென்ற 42 பேர் உயிரிழந்ததால், அவர்களது குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும்மூழ்கிக் கிடக்கின்றனர். எம்.ஜி.ஆர். நகரின் அனைத்துப் பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும்மக்கள் அழுகையும், புலம்பலுமாக காணப்படுகின்றனர்.பல உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் இருப்பதால், பலர் தங்களது குடும்பத்தினர், உறவினர்கள் என்னஆனார்களோ என்ற கவலையில் அங்குமிங்கும் அலைந்து கொண்டுள்ளனர்.
காவல்துறையினர் திட்டமிட்டு, சரியான முறையில் பாதுகாப்பு கொடுத்திருந்தால் இந்த அளவுக்கு உயிர்ச் சேதம்ஏற்பட்டிருக்காதே என்று பலரும் புலம்பியதைக் காண முடிந்தது.
இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், அவர்களில் பலர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் அவர்களதுகுடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். வயதான பலர், தாங்கள் உயிருடன் இருக்கும்போது தங்களது பிள்ளைகள்இப்படி அநியாயமாக இறந்து போய் விட்டார்களே என்று புலம்பி அழுகின்றனர்.
42 பேரை ஒரே நேரத்தில் காவு வாங்கிய இந்த கருப்பு ஞாயிறன்று சென்னை எம்.ஜி.ஆர். நகர் முழுவதும் மரண ஓலமாககேட்டுக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications