For Daily Alerts
Just In
கருணாநிதியுடன் லாலு பிரசாத் சந்திப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டில், மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் சந்தித்துப்பேசினார்.
சென்னை வந்துள்ள லாலு பிரசாத் யாதவ், இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்குச் சென்றார். அவரைவரவேற்ற கருணாநிதி, தமிழக அரசியல் நிலை, தேசிய அரசியல் குறித்துப் பேசினார்.
பின்னர் சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க உத்தரவிட்டதற்காக லாலுவுக்கு அவர்நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களை துரிதப்படுத்து மாறும்கேட்டுக் கொண்டார்.
Comments
Story first published: Sunday, December 25, 2005, 5:30 [IST]