தேர்தலில் குதிக்கும் வாரிசுகள் !
சென்னை:
மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன், மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் ஆலடி அருணாவின் மகள், மூத்த காங்கிரஸ்தலைவர் குமரி ஆனந்தனின் மகள் ஆகியோர் வரும் சட்டமன்றத் தேர்தலில் குதிக்க தயாராகி வருகின்றனர்.
தமிழக அரசியலில் தலைவர்களின் வாரிசுகள் ஈடுபடுவது புதிதல்ல. கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலின், முரசொலி மாறனின்மகன் தயாநிதி மாறன், மூப்பனாரின் மகன் ஜி.கே. வாசன், டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி ஆகியோர் ஏற்கனவேஅரசியலில் குதித்து முக்கிய இடம் வகிக்கின்றனர்.இவர்கள் வரிசையில் மேலும் 3 வாரிசுகள் இடம் பிடிக்க உள்ளனர். குமரி அனந்தனின் மகள் டாக்டர் தமிழிசை செளந்திரராஜன்,மறைந்த ஆலடி அருணாவின் மகள் டாக்டர் பூங்கோதை, மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகிய 3பேரும் வரும் சட்டசபை தேர்தலில் குதிக்க உள்ளனர்.
தமிழிசை செளந்திரராஜன் ஒரு டாக்டர் ஆவார். இவர் தற்போது பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். சிறந்தமேடை பேச்சாளரான இவர் பாஜக சார்பில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. (அதிமுகவுடன் கூட்டணிஅமைந்து அவர்கள் அனுமதித்தால்..)
இதே போல் முன்னாள் திமுக அமைச்சரான ஆலடி அருணாவின் வாரிசு டாக்டர் பூங்கோதை, சென்னை திருவான்மியூரில்மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது தந்தை போட்டியிட்டு வென்ற நெல்லை மாவட்டம் ஆலங்குளம்தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
இவருக்கு அடுத்ததாக சிதம்பரத்தின் மகனான கார்த்திக் சிதம்பரம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடப் போவதாக பேச்சுநிலவுகிறது.