பாஜக தேசிய துணை தலைவரானா இல.கணேசன்
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சியின் துணைத் தலைவராக இல.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக தலைவராக சமீபத்தில் ராஜ்நாத் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கட்சியின் புதிய நிர்வாகிகள்அறிவிக்கப்பட்டுள்ளனர். பொதுச் செயலாளர்களாக பிரமோத் மகாஜன், அருண் ஜேட்லி, அனந்தகுமார் ஆகியோர் நீடிக்கிறார்கள்.இவர்கள் தவிர வினய் கத்யார், தாவர்சந்த் கெலாட், ஓம் பிரகாஷ் மாத்யூ ஆகியோர் புதிய பொதுச் செயலாளர்களாகநியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை துணைத் தலைவராக இருந்து வந்த வெங்கையா நாயுடு அப்பொறுப்பிலிருந்துவிடுவிக்கப்பட்டு ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக மட்டுமே நீடிப்பார்.
புதிய துணைத் தலைவர்களாக இல.கணேசன், சாஹிப் சிங் வர்மா, பால் ஆப்தே, சாந்தகுமார், பாபுலால் மராண்டி, சுமித்ராமகாஜன் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே துணைத் தலைவர்களாக இருக்கும் கல்யாண்சிங், முக்தார்அப்பாஸ் நக்வி ஆகியோர் அப்பொறுப்பில் தொடருகிறார்கள்.
தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருந்து வந்த இல.கணேசன் பின்னர் அகில இந்திய செயலாளராக பதவி உயர்த்தப்பட்டார்.தற்பாது அகில இந்தியத் துணைத் தலைவர் பதவிக்கு உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.