கார் மோதி கணவன்-மனைவி, 2 குழந்தைகள் பலி
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
அரக்கோணம் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாயினர்.
நரவாக்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்த குருபரன் (40) தனது மனைவி கெளரி, மகள்கள் மோனிகா (7), சீமா (4)ஆகியோருடன் தமிழ்ப் புத்தாண்டையொட்டி இரவில் கோவிலுக்குச் சென்றார்.இரவு 10.00 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். சென்னை- பாண்டிச்சேரி இடையிலான ஈஸ்ட்கோஸ்ட் நெடுஞ்சாலையை நால்வரும் கடந்தபோது பாண்டிச்சேரி நோக்கி சென்ற கார் பயங்கர வேகத்தில்மோதியது.
இதில் கெளரி தவிர்த்த மூன்று அந்த இடத்திலேயே பலியாயினர். கெளரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது பலியானார்.












Click it and Unblock the Notifications