இலங்கை: ஜெனீவா அமைதிப் பேச்சு நடக்குமா?
மட்டக்களப்பு:
கிழக்குப் பகுதியில் இருந்து வன்னிக் காட்டுப் பகுதிக்கு புலிகளின் கமாண்டர்களை கடல் வழியாக அழைத்துவருவதில் இலங்கை கடற்படையால் ஏற்பட்டுள்ள ஆபத்தைத் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைகளில்இருந்து விலகிக் கொள்ளப் போவதாக விடுதலைப் புலிகள் அமைப்பு எச்சரித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஜெனீவாவில் வரும் 19ம் தேதி தொடங்க இருந்தன.ஆனால், வட கிழக்குப் பகுதிகளில் நடந்து வரும் வன்முறை, தமிழர்கள் கொல்லப்பட்டது ஆகிய விஷயங்கள்குறித்து அப் பகுதிகளின் கமாண்டர்களுடன் புலிகளின் தலைமை ஆலோசனை நடத்த வேண்டியிருப்பதால்பேச்சுவார்த்தையை சில நாட்கள் ஒத்தி வைக்க வேண்டும் நார்வேயிடம் எல்டிடிஈ கோரியது.
இந்தக் கோரிக்கையை நார்வே இலங்கை அரசிடம் விளக்கியது. இதையடுத்து அரசும் பேச்சுவார்த்தையை சிலநாட்கள் ஒத்தி வைக்க ஒப்புக் கொண்டது.
இதையடுத்து வரும் 24, 25 ஆகிய தேதிகளில் ஜெனீவாவில் பேச்சு நடக்கும் என நார்வே அறிவிக்கப்பட்டது.
ஆனால், புலிகளின் கிழக்குப் பகுதி கமாண்டர்களை கடல் வழியாக தங்கள் தலைமையகத்துக்கு அழைத்துவருவதில் கடற்படையால் சிக்கல் எழுந்துள்ளது.
ஆயுதங்கள் இல்லாமல் நார்வே குழுவினரின் மேற்பார்வையில் வந்த கமாண்டர்களின் படகுகளை கடற்படைக்கப்பல்கள் பின் தொடர்ந்து வந்தன. இதையடுத்து அந்தப் பயணத்தை புலிகளின் கமாண்டர்கள் ரத்துசெய்விட்டனர்.
அவர்களை புலிகளின் தலைமை சந்திக்காமல் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது சாத்தியமில்லை எனபுலிகளின் அமைதிச் செயலகத் தலைவர் பூலித் தேவன் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பு நடக்காவிட்டால்ஜெனீவா பேச்சுவார்த்தைகள் சாத்தியமில்லை என்றார்.
இதற்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசும், புலிகளும் ஆர்வம் காட்டவில்லை என்றும்,இதனால் நாட்டில் மீண்டும் வன்முறை வெடிக்கலாம் என்றும் நார்வே குற்றம் சாட்டியுள்ளது. இரு தரப்பினரும்இறங்கி வராவிட்டால் ஜெனீவா பேச்சுவார்த்தையால் எந்தப் பயனும் ஏற்படாது என நார்வே அமைதித் தூதர்ஹென்ரீசென் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications