ஒசூர், தளி பகுதிகளில் அத்வானி பிரசாரம்
சென்னை:
பாஜக முன்னாள் தலைவர் எல்.கே.அத்வானி வரும் 24ம் தேதி தமிழகத்தில் தேர்தல்பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இது குறித்து தமிழக பாஜக பொதுச் செயலாளர் குமாரவேலு செய்தியாளர்களிடம்பேசுகையில்,தமிழகத்திலேயே அதிக அளவிலான கட்சிகளோடு, கூட்டணி வைத்து தனி அணியாக,பலம் வாய்ந்த அணியாக போட்டியிடுகிறது பாஜக.
தலித் கட்சிகள் அதிக அளவில் எங்களது கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர்.மொத்தம் 18கட்சிகள் இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. திமுகவுக்கும்,அதிமுகவுக்கும் சரியான மாற்றாக பாஜக உருவெடுக்கும்.
வரும் 24ம் தேதி அத்வானி தமிழகம் வருகிறார். தளி மற்றும் ஓசூர் தொகுதிகளில்அவர் பிரச்சாரம் செய்கிறார். அன்றைய தினம் வெங்கையா நாயுடு மதுரையில்பிரசாரம் மேற்கொள்கிறார்.
இவர்கள் தவிர கோவையில் யஷ்வந்த் சின்ஹா, சென்னையில் பண்டாருதத்தாத்ரேயா, நாகர்கோவிலில் ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோர் பிரசாரம் செய்கின்றனர்.
2வது கட்டப் பிரசாரத்தின்போது மேலும் பல அகில இந்தியத் தலைவர்கள் கலந்துகொண்டு பேசவுள்ளனர்.
மாநிலத் தலைவர்களான சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன்,திருாவுக்கரசர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை முதல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர்என்றார் குமாரவேலு.












Click it and Unblock the Notifications