டாடா-தயாநிதி- பாஜக கிளப்பப் போகும் புயல்
சென்னை:
திமுகவும், அதிமுகவும் அளித்து வருகிற இலவச அறிவிப்புகளைப் பார்க்கும்போதுசிக்கன் பிரியாணி, மீன் குழம்பும் இலவசமாக தரப்படும் என்று அறிவித்தாலும்அறிவிப்பார்கள் என்று பாஜக துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,திமுகவும், அதிமுகவும் மாறி மாறி இலவச அறிவிப்புகளை அள்ளி வீசி வருகிறார்கள்.விட்டால் சிக்கன் பிரியாணியும், மீன் குழம்பும் வீடு தேடி வந்து இலவசமாக தரப்படும்என்று கூட சொன்னாலும் சொல்வார்கள்.
இதுபோன்ற மலிவான அறிவிப்புகளை, வாக்காளர்களை ஏமாற்றும் வகையிலானஅறிவிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும்.
இந்த இலவச அறிவிப்புகளுக்கு தடை விதித்து வாக்காளர்கள் ஏமாறுவதை தேர்தல்ஆணையம் தடுக்க வேண்டும்.
டாடா விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக விசாரணை நடத்தவேண்டும். தயாநிதி மாறனை அழைத்து விளக்கம் கேட்க வேண்டும்.இப்பிரச்சினையை பாராளுமன்றத்தில் நாங்கள் எழுப்புவோம் என்றார் வெங்கையா.