திருவண்ணாமலை கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு
திருவண்ணாமலை:
நாக்பூரில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து, திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயிலுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில், போலீசார் உடையில் புகுந்த தீவிரவாதிகள் 3 போர்சுட்டுக்கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து கோயில்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் அலுவலகங்களிலும் தீவிரவாதிகள்தாக்குதல் நடத்தலாம் என்று மத்திய உளவுப் பிரிவு எச்சரித்திருப்பதால் போலீஸ் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.இதனால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
பக்தர்களை ராஜகோபுரம் வழியாக மட்டுமே போக அனுமதிக்கப்படுகிறார்கள். மெட்டல் டிடெக்டர் மூலம்பகதர்களிடம் சோதனை நடத்தப்படுகிறது. கிளிகோபுரம் வழியாக கோயில் உள்பிரகாரத்துக்கு செல்பவர்களை,கேமிரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அம்மணியம்மன் கோபுரம், தெற்கு கோபுரம், பேகோபுரம் ஆகிய வழிகளை நேற்று காலை முதல்மூடப்பட்டுள்ளது. கோயிலின் நான்கு வழிகளிலும், துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்கள் கொண்டு வரும் பொருள்களை தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே கொண்டு செல்லஅனுமதிக்கப்படுகிறது. ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர்கள்தலைமையில் 15 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டடுள்ளனர்.












Click it and Unblock the Notifications