பஸ், லாரி மோதலில் 4 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு:
சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரியின் பின்னால் அரசு பஸ் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
தேவகோட்டையில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் இன்று அதிகாலை 5 மணி அளவில்மேல்மருவத்தூரை நெருக்கியது. அப்போது சாலை ஓரத்தில் சர்க்கரை ஏற்றி வந்த லாரி ஒன்று அங்கு நின்றுஇருந்தது.அப்போது அரசு பஸ் லாரியின் பின்னால் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த திருவொற்றியூரை சேர்ந்ததனலட்சுமி (30), 10 வயது சிறுமி, இன்னொரு பெண் மற்றும் பஸ் கண்டக்டர் மணிவண்ணண் ஆகியோர் சம்பவஇடத்திலேயே உயிர் இழந்தனர்.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 14 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை செங்கல்பட்டு அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications