பால்கனி கூரை இடிந்து கணவன், மனைவி பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கட்டடத்தின் பால்கனி மீது அமர்ந்திருந்த கணவனும், மனைவியும், பால்கனி கூரைஇடிந்து விழுந்ததில் உடல் நசுங்கி பலியாயினர்.
மகாகவி பாரதி நகர் 17வது தெருவைச சேர்ந்தவர் சகுந்தலா (65). இவரது கணவர்இறந்து விட்டார். மகன் மணிகண்டனுடன் வசித்து வருகிறார். கடந்த 1998ம் ஆண்டுதனது வீட்டை சகுந்தலா கட்டினார். மாடியில் கட்டிய வீட்டை வாடகைக்குவிட்டிருந்தார்.அந்த வீட்டில் பிரகாஷ் என்பவர் வாடகைக்கு இருந்தார். தந்தை ஹரிராம், தாயார்பத்மா ஆகியோரும் பிரகாஷுடன் வசித்து வந்தனர். நேற்று மாலை ஹரிராம்,பத்மாவும் வீட்டு பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போதுதிடீரென பால்கனி மேலே உள்ள வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதில் ஹரிராம், பத்மாவும் சிக்கிக் கொண்டு மேலேயிலிருந்து கீழே விழுந்தனர்.படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.












Click it and Unblock the Notifications