தரிசு நில கணக்கெடுப்பு தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தரிசு நிலங்களின் அளவு குறித்த கணக்கெடுப்பைஅதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
திமுக தேர்தல் அறிக்கையில், ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் இலவசமாகவழங்கப்படும் என்று உறுதி கூறப்பட்டிருந்தது.இந் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தரிசு நிலங்களின் அளவு குறித்தகணக்கெடுப்பை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தொடங்கியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 81 குழுக்கள் அமைக்கப்பட்டு கணக்கெடுப்பு நடந்துவருகிறது.
அரசு தரிசு நிலங்கள், ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்கள், தனியார் தரிசுநிலங்கள் என பிரித்து கணக்கெடுப்பை அதிகாரிகள் நடத்துகிறார்கள்.
ஒவ்வொரு குழுவிலும் கிராம நிர்வாக அதிகாரிகள், விவசாயத்துறை மற்றும்தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications