திருப்பதியில் அதிகாரிகளுக்கு பக்தர்கள் அடி-உதை
திருப்பதி:
திருப்பதியில் விரைவு டிக்கெட் கொடுக்கும் அதிகாரிகள் டிக்கெட் தராததால் பக்தர்கள் அவர்களை அடித்து,உதைத்தனர். பின்பு தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் பக்தர்களுடன் பேசி சமசரசம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், விஜபிக்களின் சிபாரிசு கடிதங்களுக்கு, விரைவு தரிசன டிக்கெட்வழங்கப்படுகிறது. இந்த டிக்கொட்டுகள் வழங்கும் இடத்தில் பக்தர்கள், நேற்று முன்தினம் மணிக்கணக்கில் காத்துஇருந்தனர்.விரைவு டிக்கெட் கொடுக்கப்படும் எண் 155 கவுண்டரில், அதிகாரிகள் டிக்கெட் வழங்கவில்லை. இதனால்காத்திருந்த பக்தர்கள் பொறுமை இழந்தனர்.
இதைத் தொடர்ந்து பக்கதர்கள், அந்த கவுண்ட்டருக்குள் சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் விவரம் கேட்டனர்.அப்போது அதிகாரிகள் சிபாரிசு கடித கோட்டா முடிந்து விட்டது என்று தெரிவித்தனர்.
இதை தெடர்ந்து வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது அதிகாரிகளை, பக்தர்கள் அடித்து உதைத்தனர். குஜராத்தைசேர்ந்த ஒரு பக்தர், அதிகாரி ஒருவரை வெளியே இழுத்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே இது பற்றி தகவல் அறிந்த திருப்பதி தேவஸ்தான மூத்த நிர்வாகிகள், விரைந்து சென்று பக்தர்களுடன்பேசி சமசரசம் செய்து நிலைமையை கட்டுப்படுத்தினார்.
பின்பு மாலை 4 மணிக்கு டிக்கெட்டுகள் கொடுப்பதாக உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து பக்தர்கள் அமைதிஅடைந்தனர்.












Click it and Unblock the Notifications