சென்னை to

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையிலிருந்து மதுரைக்கு குழாய் மூலம் பெட்ரோல், டீசலை அனுப்பும்திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

பெட்ரோலியப் பொருட்கள் லாரிகள் மற்றும் ரயில்கள் மூலம் சென்னையிலிருந்துமதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இதனால் ஆகும் போக்குவரத்து செலவு, வழியில் பெட்ரோலியப் பொருட்கள்கணிசமாக ஆவியாவதால் ஏற்படும் இழப்பு ஆகியவற்றைத் தவிர்க்கசென்னையிலிருந்து 11 மாவட்டங்கள் வழியாக மதுரைக்கு குழாய் அமைக்கும்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

Karunanith with Dhiyanithi, Vasan, V.Chidambaram and T.R.Balu
இந்தத் திட்டம் முடிவடைந்து இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது.சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி, பெட்ரோலியக் குழாயைதிறந்து வைத்து பேசினார்.

அவர் கூறுகையில், கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப் படுகையில் இயற்கை எரிவாயுஇருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை குழாய்கள் மூலம் தமிழகத்திற்குக்கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, மத்தியஅமைச்சர்கள் ப.சிதம்பரம், தயாநிதி மாறன், ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த குழாய் திட்டம்11 மாவட்டங்கள் வழியாக சுமார் 633 கி.மீ. தூரத்துக்கு குழாய்கள்பதிக்கப்பட்டுள்ளன.

ரூ. 420 கோடி செலவில் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் சென்னையிலிருந்து திருச்சி வழியாக மதுரை கப்பலூருக்கு குழாய் மூலம்பெட்ரோல், டீசல் அனுப்பப்படும். அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு இவைசப்ளை செய்யப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+